பாத்திமா ஸிமாரா அலி. கொழும்பு 12: பாத்திமா ஸிமாரா அலி, 41/8, அப்துல் ஹமீட் வீதி, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-38674-0-7.
கவிஞர் பாத்திமா ஸிமாரா அலி தான் கடக்கும் நொடிகளில் தான் வியந்தும் மகிழ்ந்தும் நொந்தும் ரசித்த உணர்வுகளை கவிதைகளாக்கி இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். ஸிமாரா தனது தந்தை வழியில் பாட்டால் விளக்கெரித்துப் பாட்டால் விளக்கணைத்த பெரும்புலவன் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் வழிவந்தவர். நாம் அன்றாடம் காணும் அம்சங்களை, அனுபவங்களை, அவருடைய சொற்களைக் கொண்டு வெளிப்படுத்துகின்றார். பெரும்பாலும் தான் உணர்வதையெல்லாம் தனது கவிதைக் கண்களூடே பார்த்து வெளிப்படுத்திவிடுகிறார்.