மா.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 68 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-05-4
சிவசோதியின் சிறுவயது, இளவயது அனுபவங்களும் போர்க்கால தரிசனங்களும் அனுபவச் செறிவு வாய்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளை பிரசுரிக்க ஏதுவாகின்றன. இழந்த நண்பனுக்கான சமர்ப்பணமாக வெளியாகியுள்ள இந்நூல் ‘மண் மீது நேசம் கொண்டவனே நீ உன் மண்ணோடு தூங்குகிறாய்’ என்ற உறைய வைக்கும் கவிவரிகள் அருமை. புதுக்கவிஞன் ஒருவனுக்கே உரித்தான ஏற்றமும் இறக்கமுமாக இக் கவிதைத் தொகுதியில் ஓர் உயிர்ப்புள்ள கவிஞனாக மா.சிவசோதி என்ற இளைஞனை தரிசிக்க முடிகிறது. வகுப்பறை தொடக்கம் முதிரா நினைவுகள் வரை அனைத்துக் கவிதைகளும் உணர்வு பூர்வமானவை ‘கலைமகள் வாசம் கொள்ளும் கலை பல கற்ற களம் அது’ என்ற வரிகள் வகுப்பறையை கட்டிடமாக பார்க்கும் பலரின் கோணங்;களிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஜீவநதியின் 95ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி.