ஏ.வி.ஆனந்தன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
(16), 55 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.
திருமறைக் கலாமன்றத்தின் மூத்த உறுப்பினரும், சிற்பக் கலை வல்லுநருமான ஏ.வீ.ஆனந்தனின் கலையுள்ளம் காணும் கற்பனைக் கனவுகள் தலை நிமிர்ந்து கானம் பாடுவதை இதிலுள்ள கவிதைகளின் ஊடாக காணமுடிகின்றது. அவரது சிந்தனைகள் இக்கவிதைகளில் சிறகடித்துப் பறக்கின்றன. கவிதை வரிகளுடன் பொருத்தமான அவரது சிற்பங்களின் புகைப்படங்களும் இணைந்து இந்நூலில் எம்மைப் பரவசப்படுத்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21736).