15524 கவிதைச் சிறகு.

தாஸீம் அகமது. கொழும்பு 2: சித்தி ஜெசீரா தாஸிம், எஸ்.ஜே.பப்ளிக்கேஷன், இல. 9, சவுன்டர்ஸ் கோர்ட், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xvi, 176 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-53408-1-6.

சமூக விமர்சனமிக்க கவிதைகளை 1970 முதல் எழுதிவரும் டாக்டர் தாஸீம் அஹமதுவின் இக்கவிதைத்தொகுதி 72 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. வெள்ளையில் ஒரு புள்ளி (1982), சுழற்சிகள் (1994), கண் திறவாய் (2011) ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிவரும் இவரது நான்காவது கவிதைத் தொகுதி இதுவாகும். சமூக எழுச்சிக் கவிதைகளையும் மனித வாழ்க்கை பற்றிய ஒப்பீட்டினையும் மருத்துவ விபரங்களையும் சமாதானக் குரலையும் உள்ளடக்கியவை. ஹைக்கூ கவிதைகளும் பழந்தமிழ் யாப்பிலமைந்த அவரது கவிதைகளும் ஓசைச் சிறப்பினால் கவனத்திற்குரியன. நவம்பர் 1981இல் (20.11.1981) ஸ்தாபிக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டத்திற்கான எண்ணக்கரு இவரது சிந்தனையிலேயே கருக்கொண்டது. வகவம் அமைப்பு உருவாக்கப்பட்ட  37 வருடங்களில் 140இற்கும் மேற்பட்ட பௌர்ணமி திறந்தவெளிக் கவியரங்குகளை இவ்வமைப்பு நடத்தியுள்ளது.

ஏனைய பதிவுகள்

16827 சங்க இலக்கியம் : பதிவும் பார்வையும்.

கி.விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56ஃ5, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). 138 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

11082 அருணந்தி சிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் (சுபக்கம்).

திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவர் (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). Lvi, 270