நிம்மி சிவா (இயற்பெயர்: நிர்மலா சிவலிங்கம்). சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No-B, SGP Naidu Complex, Dhandheeswaram Bus Stop, Opp. Bharathiyar Park, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
118 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21.5×14 சமீ.
கவிஞர் நிம்மி சிவா தனக்குள் தானே என்னும் உணர்வுகளுடன் உரையாடும் சக கவிஞர்களுடன் நிம்மி சிவா இணைந்துகொள்கிறார். அவருடைய வட்டம் அவருக்கேற்றாற் போல் நெளிந்துக் கொடுக்கிறது சில சமயம் சதுரமாகவும். நட்பு, துரோகம், பிரிவு, பசி, துயரம் என அனைத்தையும் சாடியிருக்கிறார். நிம்மி சிவா, வாழ்வியலின் நிலையாமை பற்றியும் பலவிடங்களில் பதிவு செய்திருக்கிறார். புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள், மனக்கசப்புகள் இவரை இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கலாம். ஆனாலும் உதிர்தலில் விருப்பமில்லையென்பதனையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பறவையைக் கையில் எடுத்து தடவிக்கொடுக்கையில் தோன்றுகின்ற மென்மையான உணர்வுகள் நிம்மி சிவாவின் கவிதைகளை வாசிக்கும்போது மனத்தை வருடுகின்றன. கவிதை ஆற்றல் நன்கு கைவரப்பெற்ற நிம்மி சிவா தமிழை, கவிதையை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வார் என்கிற நம்பிக்கை இக்கவிதைத் தொகுதியின் வாயிலாகப் பிறக்கிறது.