கோகுலன் (இயற்பெயர்: ஹர்ஷவர்த்தன் கோகலன்ராஜன்), சு.இரவிச்சந்திரன் (பதிப்பாசிரியர்). நாணுஓயா: சு. இரவிச்சந்திரன், அதிபர், கார்ல்பேர்க் தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xi, 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44147-0-4.
கோகுலனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. செம்மொழி, என்அம்மா, புது உலகம், விடியலின் வசந்தம், உலகத்துல, கண்கள், கல்லூரி, நண்பன், என் கனவு, மயக்கம், கனவின் கதைகள், சிதறல்கள்,தோழி, புன்னகைப் பூவே, காதலின் வலி, காலத்தின் கோழை, உந்தன் நினைவுகள், யாரோ அவள், வலை, என்தோழன், இதயம், நட்புச் சிதறல்கள், கண்ணீர், மனதில் ஓர் ஈரம், ஏங்குகிறேனடி, அன்பே, உன்னைச் சேர்கின்றேன், காதல் சிதறல்கள், இரவின் சூரியன், என்னைக் கொய்தவள், காதலின் தொல்லை, நினைவில் நீ, கண்ணே என் கண்ணீர் என இன்னோரன்ன 67 காதல் ரசம் ததும்பும் கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது.