யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xii, 66 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-18-9.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ். அகத்தியன், புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். உயர் கல்வியை பிரான்சில் மேற்கொண்டவேளை பிரபல கவிஞர்களின் படைப்பாக்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டவர். அங்கு ‘தமிழருவி’ என்ற வானொலியின் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது முதல் படைப்பு ஆனந்த விகடனில் பிரசுரமானது. தொடர்ந்து தமிழகப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது படைப்பாக்கங்கள் வெளிவந்திருந்தன. சுமார் 15 ஆண்டுக்கால அனுபவத்துடன் இத்தொகுப்புகளை மேற்கொண்டுள்ளார்.