சுஜந்தினி யுவராஜா. மூதூர்: செல்லக்குட்டி வெளியீட்டகம், சம்பூர், 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி).
xx, 98 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-5060-00-9.
மூதூரில் சம்பூர் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் சுஜந்தினி யுவராஜா. தற்போது பாடசாலை அதிபராகப் பணியாற்றுகின்றார். இது இவரது முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இவரது கவிதைகளில் சம்பூர் பிரதேச மணம் வீசுகின்ற பல இடங்களை காணமுடிகின்றது. வில்லுக்குளம், அன்னையவள் எங்கள் காளியம்மா எனும் கவிதைகள் தான் பிறந்த வளர்ந்த மண்ணையும் அதன் தனித்துவத்தையும் மக்களையும் வெகுவாக எடுத்தாண்டிருக்கிறார். பல கவிதைகளில் நேரில் நின்று கதைபேசுவது போல பல கவிதைகள் ஆக்கப்பட்டுள்ளன.