15548 தலைப்பில்லாத கவிதைகள்.

உவைஸ் முஹம்மத். சாய்ந்தமருது 03: மருதம் கலைக்கூடல் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (சாய்ந்தமருது: எக்செல்லென்ட் பிரின்ட்).

xii, (2), 15-100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-35988-0-6.

‘கவிதைகளுக்கு தலைப்பிடுவதும் சில நேரங்களில் அர்த்தமற்றதாகின்றதா? அல்லது அவசியமற்றதாகின்றதா? என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒரு கவிதை நூலுக்கான அடையாளம் இது. வாசகர்கள் கொண்டுள்ள அனுபவங்களும் மொழித் தேர்ச்சிகளும் இந்தக் கவிதைகளுக்கான தலைப்புகளை கண்டுகொள்ளவல்லது. எதற்கான கவிதை அல்லது எதைப் பற்றிய கவிதை என்பதை விடவும் எது கவிதை என்பதற்கு துணிந்த ஒரு தொகுதியாக இதைக் காணலாம். உவைஸ் முஹம்மட் காத்திரமான வித்தியாசங்களை நாடுவதில் அதிக ஈடுபாடும் தேடலும் கொண்டவர். அவருடைய தேடலின் வெளிப்பாடான இத்தொகுதி காத்திரமான ஒரு கவிஞனுக்கான பார்வையை அவர்மீது திரும்ப வைத்திருக்கிறது. அவருடைய கவிதைகள் அதனை பதிய வைத்திருக்கிறது. அவரின் கவிதைகளோடு நம் வாசிப்புக்கள் தலையிடட்டும். அவ்வாறே அதற்கு உரிய தலைப்பிடட்டும்’. (நவாஸ் சௌபி, பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்