எஸ்.ஜனூஸ். மாளிகைக்காடு-01: சம்சுதீன் ஜனூஸ், தடாகம் இலக்கிய வட்டம், 61, லெனின் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி, 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).
(12), 13-79 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54019-0-6.
கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்கவிஞர். சாய்ந்தமருதில் பிறந்து தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றுகின்றார். 1996இலிருந்து கவிதைத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். முத்தல், அழகான பிச்சைக்காரி, அது வரவில்லை, தாக்கத்தி, எனக்குள் பேசப்படுகிற தேவதை, உடைக்கப்படுகிற கவிதை, போட்டு மடையன், எலிச்சமர், கால்மணிநேரக் கனவு, ஆசியாவின் ஆச்சரியம், முதல் ரசிகை, என் உலகம் நீ, காதல் சருகுகள், காணத்துப் போன கவிதைகள், அறிவிப்பாளனுக்கொரு அஞ்சலி, வட்டிக்காரி, குறிஞ்சிச் சோதரிக்கு, புன்னகையின் மரணம், மரணம் சக அவள், காதல் சுனாமி, இயற்கையின் பிரகடனம், ஈர்ப்பு விதி, ரைஸ் குக்கர், சமாதானம் தேவை, நிலாத் தெறிக்கும் குருத்து மணல், ஷாத்தான் குடிகொள்ளும் கன்னக் குழிகள், யாருமே இல்லாத நீயும் நானும், அலைகளின் தீவிரவாதம், வயசா-? போன போக்கால, கிராமத்து கீறல்கள், வரம்படியில் ஒரு வண்ண நிலா, எனது தந்தை, மூன்றாம் தவணைக் காலம், அவுஸ்திரேலியக் கூதல், ஒரு வெட்டுக்குத்து சீசனில், தேய்ந்து போன என் தேசம், வெட்டாப்பு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டு;தாபனம், விலையேற்றம், இன்டர்வியூ, என் வசமில்லாத ஒரு கிரமத்தின் மழைநாள், வாழ்க்கைப் படிமங்கள், இராப் புதினங்கள், பெண்களைப் புரியவில்லை, வை திஸ் கொலவெறி, ஏன் இந்தத் தாமதம் ஆகிய அழகான தலைப்புகளிட்டு இவர் வடித்துள்ள கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.