யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xvi, 70 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-17-2.
நிலத்தின் நினைவுகளை ஏக்கங்களாகச் சுமந்து புகலிடத்தில் (லண்டனில்)வாழும் ஒரு இளம் கவிஞனின் எண்ணங்கள் வண்ணங்களாக வடிவம் பெற்றுள்ளன. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையொத்த கவிதைகள். மாதிரிக்குச் சில: உனக்கு நீயே வைத்த கொள்ளி/புகைக்கிறது/சிகரட் வழியே, உங்கள் செல்லப் பிராணியின்/கூட்டுக்குள் இல்லை/ காட்டின் வசதி, பெற்ற கடனை அடைக்க வேண்டும்/ தேடித்தாருங்கள்/ வாடகைத் தாயை. ஐந்து நூல்களை ஒரே தொகுதியில் வெளியிட்டுள்ளார். எழுத்துக்களோடு நின்றுவிடாமல் நடிகனாகவும், பாடலாசிரியராகவும், வானொலி தொகுப்பாளராகவும், வலம்வரும் யாழ் அகத்தியன், தாயக பூமியில் சோதனைகளைத் தாங்கி புலம்பெயர் மண்ணில் தனக்கென பாதைகளை அமைத்து பயணித்து வருகிறார்.