15559 நாளைகளின் நறுமணம்: புதுக் கவிதை.

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xvi, 70 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-17-2.

நிலத்தின் நினைவுகளை ஏக்கங்களாகச் சுமந்து புகலிடத்தில் (லண்டனில்)வாழும் ஒரு இளம் கவிஞனின் எண்ணங்கள் வண்ணங்களாக வடிவம் பெற்றுள்ளன. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையொத்த கவிதைகள். மாதிரிக்குச் சில: உனக்கு நீயே வைத்த கொள்ளி/புகைக்கிறது/சிகரட் வழியே, உங்கள் செல்லப் பிராணியின்/கூட்டுக்குள் இல்லை/ காட்டின் வசதி, பெற்ற கடனை அடைக்க வேண்டும்/ தேடித்தாருங்கள்/ வாடகைத் தாயை. ஐந்து நூல்களை ஒரே தொகுதியில் வெளியிட்டுள்ளார். எழுத்துக்களோடு நின்றுவிடாமல் நடிகனாகவும், பாடலாசிரியராகவும், வானொலி தொகுப்பாளராகவும், வலம்வரும் யாழ் அகத்தியன், தாயக பூமியில் சோதனைகளைத் தாங்கி புலம்பெயர் மண்ணில் தனக்கென பாதைகளை அமைத்து பயணித்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Lucky Dreams Provision Code

Content Welches Ist und bleibt Über Sogenannten No Abschlagzahlung Free Spins Gemeint? – energy fruits Online -Slot Dies Werden Unser Top3 No Frankierung Bonus Casinos