15576 பிரேமதியானம்: உணர்வுச் சித்திரம்.

சிலோன் விஜயேந்திரன். யாழ்ப்பாணம்: நாம் இலங்கையர் இயக்கம், சண்டிருப்பாய், 1வது பதிப்பு, டிசம்பர் 1971. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம், தட்டாதெரு).

28 பக்கம்,விலை: 75 சதம், அளவு: 18×12 சமீ.

வசன கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ள உணர்வூற்றுரவகச் சித்திரம் இது. இலக்கிய உலகில் தனித்துவம் மிக்க படைப்பாளியான விஜயேந்திரனின் எழிலும் எடுப்பும் மிக்க மொழி ஆளுகைத் திறனுக்கும், கற்பனை விரிவுக்கும் சான்றான இந்நூல், காதல் ரசமும் பிரிவுத் துயரும் பாடுகின்ற வசன கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. ‘வைகறை’  என்ற இலக்கிய இதழை வெளியிட்டுவரும் இவர் ‘விஜயேந்திரன் கவிதைகள், ‘அவள்’ என்ற நாவல், ‘அண்ணா என்றொரு மானிடன்’ அஞ்சலி நூல், ‘சௌந்தர்ய பூஜை’ என்ற சிறுகதைத் தொகுதி ஆகிய நூல்களைத் தொடர்ந்து இந்த வசன கவிதை இலக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16505).

ஏனைய பதிவுகள்

16316 இலங்கையின் கண்டல் காடுகள் : பிரயோசனங்களும் பிரச்சினைகளும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21×15.5 சமீ.,