பிரகாசக் கவி (இயற்பெயர்: முஹம்மது புஹாரி அன்வர்). கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0932-24-5.
முஹம்மது புஹாரி அன்வர் கிழக்கிலங்கையின் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு மாளிகைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது முதல் கவிதைத் தொகுதி 2014இல் தடம் தொலைத்த தடயங்கள் என்ற பெயரில் வெளியாயிற்று. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.