ரீ.எல். ஜவ்பர்கான். காத்தான்குடி: கிழக்கு மண் பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
xiv, (4), 92 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-97102-4-0.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான், இக்கவிதைத் தொகுதிக்கான 2015 தேசிய சாஹித்திய மண்டல விருதினைப் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே எட்டு நூல்களை இவர் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கவிதைத் தொகுதியில், வெறுமையாகிய அகக்காயம், துரோகித்தலாகிப்போன ஜீவ நகர்வு, சூரிய இறக்கை, புலராத பொழுதும் சிலுவை காவிகளும், நாளையாய் சுருங்கிய இன்று, சோமாலியக் குசினியும் எத்தியோப்பிய அடுப்பங்கரையும், முறிந்த சிறகும் என் வானமும் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.