மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
69 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-41569-6-8.
மானிட சமூகத்தில் உண்மை, நேர்மை, நீதி, நியாயம், போன்ற மனு தர்மங்கள் தளைத்தோங்க வேண்டும். பொய்யும் புரட்டும் ஏமாற்றும் வஞ்சகமும் இல்லாத நிலைமை உருவாக வேண்டும். எங்கும் எதிலும் எப்போதும் சத்தியமே முன்னணியில் திகழ வேண்டும் மனிதர்க்கு மனிதர்களே கொடுமை செய்யும் பொல்லாநிலை பொசுங்கிப் போகவேண்டும் என்ற உன்னத உணர்வுகள் என் உள்ளத்தை நெருடிய பொழுதுகளிலும், வஞ்சனைகளும் துரோகங்களும் பொறாமைகளும் என்னைத் தாக்கிய வேளைகளிலும் என் இதயம் வடித்த கண்ணீர்த் துளிகள் தான் கவிதைகளாக இந்நூலில் அதிகம் இடம்பிடித்துள்ளன. (ஆசிரியர், முகவுரையில்).