15613 வருவாரா மாதொருபாகன்?.

கரவைக்கவி (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4041-23-3.

மகுடம் வெளியீட்டகத்தின் 27ஆவது வெளியீடாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தம் பார்வையை உறுத்தும் விடயங்களை உள்வாங்கி, மனதில் எழும் எண்ணங்களை விரிவாக்கி, அவற்றை எழுத்துக் கோர்வைகளாக, அவை எங்கிருந்து பெறப்பட்டனவோ, அந்த இடத்திற்கே திரும்பவும் ஒரு படைப்பாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர் கரவை மு.தயாளன். இத்தொகுதியில் தனது 47 கவிதைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற இன்னோரன்ன வடிவங்கள் இவரது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில்லை. எழுதத் தூண்டும் எண்ணங்கள் கவிதை வரிகளாகி இறங்குகின்றன. இக்கவிதைகள் யாவும் 2019-2020 காலப் பகுதியில் எழுதப்பட்டு முகநூலில் வலம்வந்தவையாகும்.

ஏனைய பதிவுகள்