15733 பூமாஞ்சோலை.

சிவ ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 116 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-10-8.

மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியும் ஈழத்துப் படைப்பாளியுமான சிவ.ஆரூரன் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கைச் சிறையில் வாழ்கின்றார். இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளடங்கிய சிறுகதைத்தொகுப்பு இதுவாகும். சிறையிலிருந்தபடியே சிவ.ஆரூரன்; ‘யாழிசை’ என்ற நாவலை 2015 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார். இந்த நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. பூமாஞ்சோலையில், வலியும் கேலியும், ஒழுக்கத்தின் பரிசு, அப்பெட்டைக் குட்டி, தங்கச் சங்கிலி, விடுபட்ட விற்சுருள், சூரியக் கதிர், நிழல் உருவம், அன்புக்கும் அறிமுகம், நூறு ரூபா, சிறந்த மாணவன், உண(ர்)வுப் பொதி, செம்மை ஆகிய பன்னிரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 99ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்

12074 – புதிய சைவ சமயபாடம்-8 (1978 முதல்).

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

13564 தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்: வணிகமாக்கப்பட்ட வலிகள்.

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா