மணி வேலுப்பிள்ளை. கனடா: செல்வம் அருளானந்தம், 84, Coleluke Lane, Markham, Ontario L3S0B7, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்).
186 பக்கம், விலை: இந்திய ரூபா 220.00, அளவு: 21.5×14 சமீ.
நூலாசிரியர் மணி வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழக ஆங்கிலப் பட்டதாரியான இவர் இலங்கையிலும் கனடாவிலும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவரது எழுத்துக்கள் காலம் இதழில் தொடர்ந்து வெளிவருகின்றன. மொழியினால் அமைந்த வீடு (2004), நாங்கள் அவர்கள் (2014) ஆகிய நூல்களை முன்னர் வெளியிட்டவர். இந்நூலில் ஈமச்சடங்கு (அல்பெர்ட் காம்யு-பிரான்ஸ்), பணிப்பெண் (அல்பொன்சோ கட்டா-கியூபா), போலின் (அனத்தோல் பிரான்ஸ்-பிரான்ஸ்), மனிதரின் தலைவிதி (அந்ரே மல்ரோ-பிரான்ஸ்), உருவனின் குதிரை உலுசரோ (ஆஸ்கார் காஸ்ட்ரோ-சிலி), வறட்சி (சி.இராசரத்தினம் -சிங்கப்பூர்), குழந்தைகளும் வளர்ந்தவர்களும் (ஐவன் கங்கர்-யூகோசிலாவியா), பச்சை இலையான் (கால்மன் மிக்சத்-ஹங்கேரி), சுவர் (சார்த்தர் – பிரான்ஸ்), அப்படி எல்லாம் நடந்தும் கூட (சிக்விரிட் சிவேசு-சுவீடன்), மதம் கொண்ட பள்ளத்தாக்கு (ஜோஸ் குவாத்ரா-ஈக்குவடோர்), தாய்மை (லிலிகா நகோஸ்- கிரேக்கம்) ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.