கி.நடராசா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 136 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-51-1.
இந்நூலில் இலக்கியப் பிரிவின் கீழ் சங்க காலத்தில் பெண்கள், கவிதை நயம், கவிதை ரசனையில் தோன்றிய புதுமொழிகள், மாறும் தமிழ்க் கவிதை, பாரதி கண்ட புதுமைப்பெண், பாரதி-பாரதிதாசன் ஓர் ஒப்பீடு, பல்துறை ஆய்வாளர் பேரறிஞர் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை, பேராசிரியர் கனகசபை அருணாசலம் அவர்களின் தமிழ் ஆய்வுப் பணி, இளங்கோவின் சிலப்பதிகாரமும் வெற்றிவேலரின் சிலம்பு கூறலும் ஓர் ஒப்பு நோக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் திருமண வாழ்க்கை முறை, தமிழ் இலக்கிய வரலாற்றில் குழந்தைக் கவிதையின் செல்நெறிப் பாங்கு, தமிழ் ஒரு செம்மொழி, சிறுகதை பற்றிய சிறு குறிப்பு ஆகிய 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவான கல்விப் பிரிவில், குழந்தைக் கல்வி, பாடசாலை ஒரு சமூக நிறுவனம், கல்வியின் நோக்கம், குழந்தையின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரும் ஆசிரியரும், எமது கல்வித் திட்டத்தின் குறைபாடுகள் ஆகிய 5 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 165ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.