15817 மலையகக் கவிதைகளும் மக்களும்.

ஸாதியா பௌஸர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 210 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-718-9.

இந்நூலானது மலையக மக்களின் வரவும் ஆரம்ப காலகட்டப் பிரச்சினைகளும் (மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தமைக்கான காரணங்கள்/ஆரம்ப காலகட்ட வாழ்க்கைப் போராட்டம்), மலையகக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆரம்பகாலம் 1825-1920/விழிப்புணர்ச்சிக் காலம் (1920-1950களின் இறுதிவரை/எழுச்சிக் காலம் 1960 தொடக்கம் இன்று வரை), மலையக மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் (தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் ஒப்பந்தங்களும்/இனக்கலவரங்களும் அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும்/அரசியல் தலைவர்களின் நிலை), மலையகக் கவிதைகளும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளும் (உணவுப் பிரச்சினை/உடைப்பிரச்சினை/வறுமை/வதிவிடப் பிரச்சினை/போதியளவு மருத்துவ சுகாதார போக்குவரத்து வசதிகள் இன்மை) ஆகிய நான்கு இயல்களில் தன் ஆய்வினை முன்னெடுத்திருக்கின்றது. கலாநிதி ஸாதியா பௌஸர் கண்டி கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்