15835 இலக்கியத்தின் சமூகப் பிரதிபலிப்புகள்: சமூகவியல் கோட்பாடுகளின் வழியான திறனாய்தல்.

இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xvi, 134 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7740-01-0.

இந்நூலில் பின்நவீனத்துவப் பாணியிலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு கோட்பாட்டு நிலையிலான அடையாளப்படுத்தல், பின்னைப் போர்க்காலக் கவிதைகள்: பாடுபொருள்களை மையப்படுத்திய தளவேறுபாடுகள் பற்றிய தேடல், இலக்கியத்தில் சிறுவர்களுக்கான சமூக நீதி: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை மையமாகக் கொண்ட ஓர் இலக்கியச் சமூகவியல் நோக்கு, ஜனநாயக வகுப்பறை: சிறுவர் பற்றிய இலக்கியமான ‘ஆயிஷா’வின் ஆழ்ந்த தரிசனம், துட்டுக்கு உதவாதா சொட்டைக்கவி? அங்கதமாய் நிகழ்ந்த ‘பாரதி கவிதைச் சமர்’ குறித்து நினைவில் மீட்டல், பெண்ணியக் கவிதைகள்: நோக்க வேறுபாடுகளுடன் கூடிய தடங்கள், இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகளில் நிலைமாற்றத்துக்கான நகர்வுகள், மு.தளையசிங்கத்தின் ‘மெய்யுள்’: காலவெளி கடந்த கருத்துநிலை பற்றிய ஒரு மறுவாசிப்பு, முகாமைத்துவத்தில் வழிநடத்தல்: திருக்குறள் வழியே எண்ணக்கருக்களைத் தேடல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் யாவும் சமூகம், இலக்கியம் எனும் இரு அம்சங்களும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் சமாந்தரமான இயங்கியல் நிலையில் திகழ்வதை தெளிவுபடுத்துகின்றன. இராஜேஸ்கண்ணன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை முதநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Jak stworzyć firmową witrynę stopniowo?

Content Kasyno queen of the nile: Umieszczanie tytułu stronicy profesjonalistów sieciowych Kiedy Błyskawicznie skonstruować witrynę z wykorzystaniem ChatGPT [Przewodnik gwoli początkujących] Zamiary cenowe sieci Web