15882 அம்மா:அமரர் அன்னலட்சுமி யேசுதாசன் நினைவு வெளியீடு.

 குடும்பத்தினர். வவுனியா: அமரர் அன்னலட்சுமி யேசுதாசன் குடும்பத்தினர், பெரியதம்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவனியா பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், வவுனியா ஸ்ரீராம புரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு முதலி வழித்தோன்றலுமான ஓயவுபெற்ற ஆசிரியை அன்னலட்சுமி யேசுதாசன் (07.11.1953-25.02.2017) அவர்களின் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். வழமையான இரங்கல் செய்திகள், திருமுறைப்பதிகங்களுடன் இம்மலரில் தாய்மையைக் கருவாகக் கொண்ட ‘தாய்’ (வ.அ.இராசரத்தினம்), ‘அம்மாவின் பாவாடை’ (அ.முத்துலிங்கம்), ‘கோசலை’ (ரஞ்சகுமார்), ‘பாதுகை’ (குந்தவை), ‘அம்மாவின் உலகம்’ (த.கலாமணி) ஆகிய சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Black-jack 21

Posts The top Free Black-jack Variants To experience For fun An educated Black-jack Internet sites Black-jack Principles For starters So it online credit online game