15886 தடம் பதித்த தயாளன்: சுருக்க வரலாற்றுத் தொகுப்பு.

ஆ.மு.சி.வேலழகன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, தை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).

(4), 109 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-07-8.

மட்டக்களப்பு-வடக்கு, ஊறணியில் சிறப்புற வாழ்ந்த மறைந்த அமரர் கவிஞர் செபமாலை பத்மநாதன் (06.11.1950-23.12.2018) அவர்களது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் இங்கு நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. நூல் தொகுப்பாளரும், உறவினர்களும், நண்பர்களும், அறிஞர்களும், சகபாடி ஊழியர்களும் இந்நூலினூடாக அமரர் செ.பத்மநாதன் அவர்களின் சிறந்த வாழ்வியல் பாங்கினையும் கண்ணியமான கடமையுணர்வினையும் மற்றும் அவரது குணவியல்புகளையும் நிறையவே வெளிக்கொணர்ந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையில் ஒரு நடத்துநராக இணைந்து இறுதியில் ஒரு நிர்வாக அதிகாரியாக-கணக்காளராக- ஓய்வுபெற்றவர் இவர். இலக்கியம், சமயம், மற்றும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வாழ்ந்தவர்.

ஏனைய பதிவுகள்