16036 யாவரும் கேளிர்: பத்தி எழுத்துகள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 396 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 1000., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6098-01-8.

மூத்த எழுத்தாளரும் ‘ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் பதிப்பாளருமான  மருத்துவ கலாநிதி திரு.ஞானசேகரன் அவர்களால் ‘யாவரும் கேளிர்” என்ற மகுடத்தில் தினகரன் வார மஞ்சரியில் 75 வாரகாலமாக எழுதப்பட்டு வந்த பத்தி எழுத்துக்களின் தொகுப்பு. இப்பத்தியில் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் பற்றிய விபரங்கள், நூல் விமர்சனங்கள், உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் எனப் பல்துறை சார்ந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11156 நாகம் பூசித்த நயினை ஸ்ரீ நாகபூஷணி.

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அறங்காவலர் சபை. இலங்கை: உதயமலர்,அமரர் பரமலிங்கம் உதயகுமாரன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 80 பக்கம்,