அ.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).
174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
‘மறை அருவித் துளிகள் என்ற நூலின் கட்டுரைகளை எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அருட்பணியாளர் பேனாட் ரெக்னோ அவர்களின் எழுச்சியூட்டும் உற்சாகமே எழுத்துத்துறைக்குள் என்னை மீண்டும் இழுத்தது. அவர்கள் ஜேர்மனியில் இருந்த காலத்தே அளித்த உணர்வு கிறிஸ்துவை நன்கு அறிய இந்நூலை எழுத என்னை வைத்துள்ளது. அடிக்கடி ‘தொடுவானம்” என்னும் ஜேர்மன் ஆன்மீக சஞ்சிகைக்கு கட்டுரைகள் எழுதுவேன். அவற்றில் சிலவற்றையும் இணைத்து நான்கு நற்செய்திகள் ஏன்? அவை அவசியம் தானா? எனக் கேள்வி எழுப்பி கிறிஸ்துவ அனுபவங்களை நூலாக எழுதியுள்ளேன். கேள்வியும் பதிலுமாக வரும் பகுதி ஒரு புதிய பரிமாணம். திருக்குறளும் நாமும் என்னும் அங்கம் நல்ல வரவேற்பைப் பெறும் என எண்ணுகின்றேன். செபமாலை பற்றியும், ஒளியைப் பற்றியும் உப்பைப் பற்றியும், கிறிஸ்தவர்களாக நாங்கள் அறியவேண்டியவை எழுதப்பட்டுள்ளன. நாங்களே ஆண்டவனின் கோவில்கள் எனும் எண்ணம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு பழமையானது.” (நூலாசிரியர், நன்றியுரையில்).