தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
152 + (20) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.
நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் இம்மலர், 1995ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் வாழ்வில் சைவம் (இ.தெய்வேந்திரன்), தும்பிக்கை நாதன் துணை (தமிழரசன்), திருமுருகாற்றுப் படை (வை.அநவரதவிநாயகமூர்த்தி), அறியாயோ? (சோ.பத்மநாதன்), நல்லூர் கந்தசுவாமி நான்மணிமாலை (சொக்கன்), அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் (கோ.சி.வேலாயுதம்), நாவலர் சற்குருமணிமாலை பாடிய அம்பலவாண நாவலர் (அ.ஆறுமுகம்), இந்து மதத்தில் கன்மம் ஒரு நோக்கு (நயினை கி. கிருபானந்தர்), நல்லூர் வீதியில் உலாவிய மூவர் (ஆத்மஜோதி நா.முத்தையா), சரணகமலாலயம் (பிரம்மஸ்ரீ சிவ.வை.நித்தியானந்த சர்மா), யாழ்ப்பாண நகரத்திற்கு ஒரு சதுக்கம் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), சமஸ்கிருதத்திலுள்ள முருகன் துதிமாலைகள் (வி.சிவசாமி), அந்த ஒரு வாசகம் எது? ஒரு சிந்தனை (க.சிவராமலிங்கம்), முருகனும் தமிழும் (அ.சண்முகதாஸ்), இருபத்தோராம் நூற்றாண்டுக்கான கல்வியும் தெய்வீகப் பொலிவு வழங்குதலும் (சபா. ஜெயராசா), உலகளாவிய இந்துமதம் ஒரு சிந்தனை (கா.குகபாலன்), கரும மார்க்கமும் தருமமார்க்கமும் போதிப்பதென்ன? (கலைவாணி இராமநாதன்), மாலோன் மருகன் (எஸ்.சிவலிங்கராஜா), கச்சியப்பரின் கவிதா சாமர்த்தியம் (தமிழருவி த.சிவகுமாரன்), ஈழ நல்லூர் குறவஞ்சி (நா.க.சண்முகநாதபிள்ளை), நல்லூர் கந்தசுவாமி கோயில் தல இலக்கியங்கள் (பரரசசிங்கம் கணேசலிங்கம்), பிறவாமைப் பெரும் பேறு (நல்லையா விஜயசுந்தரம்), நல்லூரும் நாவலர் சிலையும்: சில வரலாற்று நினைவலைகள் (சி.க.சிற்றம்பலம்), கந்தன் வழிபாட்டில் காவடியாட்டம் ஓர் அறிமுகம் (எம்.வேதநாதன்), அறிவும் அறமும் ஆறுமுகம் (நாச்சியார் செல்வநாயகம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன.