16099 நல்லைக்குமரன் மலர் 2000.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

157 + (18) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 2000ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் ஆலயங்கள் சமூகப் பணியாற்ற வேண்டும் (இ.தெய்வேந்திரன்), இந்து இளைஞர்களுக்கு ஓர் பகிரங்க அறைகூவல் (இரா. இரத்தினசிங்கம்), பிரார்த்தனை (சு.து.ஷண்முகநாதக் குருக்கள்), நல்லூரில் ஒரு மருந்து நலமெல்லாம் தரும் விருந்து (நா.க.சண்முகநாதபிள்ளை), நல்லூரே தஞ்சம் (த.ஜெயசீலன்), நல்லூரான் சரணம் (பு.திலீப்காந்த்), நல்லூர் கந்தனின் கொடியேற்ற வைபவச் சிறப்பு, நல்லூர் முருகனின் திருபுகழ் (நவாலியூர் சோமசுந்தரப் புலவர்), நல்லைக் கந்தப்பனின் சிறப்பு (சேவகப் பெருமாள் 1923ஆம் ஆண்டு), நல்லூர் சிந்தனைக் காப்பு (புத்தூர் பெரியதம்பு சின்னப்பு ஆச்சாரி 1930ஆம் ஆண்டு), ஞானத் தலைவன் நீயிருக்க … (நெடுந்தீவு லக்ஸ்மன்), தேன் மொழியின் தெய்வம் (நல்லை அமிழ்தன்), தங்கமயில் ஏறிவந்து தமிழ் மக்களை காப்பாயே (காரை சி.சிவபாதம்), காத்தருளும் கருணை வள்ளல் (மீசாலையூர் கமலா), வழிகாட்டும் துணையாக வரவேண்டும் (செ.பரமநாதன்), கந்தன் என்ற நாமம் கலியுக வெப்பைத் தணிக்கும் (சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி), தஞ்சாவூர் (பொ.சிவப்பிரகாசம்), மனம் மொழி மெய் (சிவ. வை.நித்தியானந்த சர்மா), இலங்கையில் முருக வழிபாடு (கண. ஜீவகாருண்யம்), இறையுணர்வு – சைவ வழிபாடு (செ.மதுசூதனன்), பக்திப் பாடல்களில் ஆடல் (புத்தொளி ந.சிவபாதம்), வடமொழிச் சொல்லிலுள்ள நாமாவளிகள் ஒரு வரலாற்று நோக்கு (வி.சிவசாமி), மயில்வாகனன் (செ.தேவதாசன்), இந்துமதம் கூறும் வாழ்வியல் (பா.சர்வேஸ்வர சர்மா), கந்தனை விட்டால் கதி யார்? (இராசையா ஸ்ரீதரன்), இறைவழிபாட்டின் அவசியம் (சிவஸ்ரீ சிவகடாக்ஷ கணேசலிங்கக் குருக்கள்), திருமந்திரத்தில் சைவசித்தாந்தம் (சிவ.மகாலிங்கம்), நல்லூரானை நாடி மனதை வெல்வோம் (சகுந்தலாதேவி கனகராசா), ஊரினிலே நாம் போய் இருந்திட வேண்டும் (தர்சிகா சந்திரதாஸ்), அருணகிரிநாதரின் அருள் அனுபவம் (மங்கையற்கரசி திருச்சிற்றம்பலம்), செல்வச்சந்நிதி முருகன் ஆலய வரலாறு ஒரு நோக்கு (பிரம்மஸ்ரீ காரை.கு.சிவராஜ சர்மா), நீலமயில் மீது வரவேண்டும் (சாருஜா ரங்கராஜா), வாழ நினைத்தால் வாழலாம் (கா.கணேசதாசன்), கலியுக வரதனின் கருணை (இராசையா ஸ்ரீதரன்), நித்தமும் நினைப்பின் (கீழ்கரவை – செல்லையா வல்லிபுரம்), காயத்ரீ மந்திர மகிமை (ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா), அழகே ஆறுமுகவடிவேலா (சா.அஜிந்தன்), காலையும் மாலையும் கைதொழுவார் (மனோன்மணி சண்முகதாஸ்), கீதை கூறும் வாழ்க்கை நெறி (விக்னேஸ்வரி சிவசம்பு), சயங்கொண்டார் வழியில் அருணகிரியார் (சோ.பத்மநாதன்), இல்லையினித் துயர் என்றுரைக்க அருள் தாருமையா (இராம ஜெயபாலன்), யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் (சொக்கன்), சிவாகம மரபில் திருக்கோயிற் பண்பாடு (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), ஈழத்தில் முருக வழிபாட்டின் தொன்மை ஒரு வரலாற்று நோக்கு (சி.க.சிற்றம்பலம்), சாமுசித்தராய் அவதரித்த சம்பந்தன் (மட்டுவில் ஆ.நடராசா), திருவிசைப்பாவில் சேந்தன் தந்த திரு அமுது (தெல்லியூர் செ.நடராசா), புராணங்கள் உணர்த்தும் வேதசிரப்பொருள் (கலைவாணி இராமநாதன்), நல்லைக் கந்தன் பில்ளைத் தமிழ் (ச.தங்கமாமயிலோன்), நல்லூர் கந்தசுவாமி கோயில் பற்றிய நூல்கள் ஆகிய தலைப்புக்களில் எழுதப்பட்ட ஆக்கங்கள் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Real money Harbors Uk

Posts Is On the internet Slot Casinos Dependable? – casino slots magic Do i need to Enjoy Casino games On my Cellular? Finest Casinos on