செல்லையா சிவபாதம். யாழ்ப்பாணம்: செல்லையா சிவபாதம், பணிப்புலம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு).
96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-5881-46-8.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதிக்கு பதவுரை, பொழிப்புரை, ஆய்வுரை, மற்றும் கந்தபுராணக் கதைகள் அடங்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் கலாபூஷணம், சைவசித்தாந்த பண்டிதர், பௌராணிக வித்தகர் செல்லையா சிவபாதம் அவர்கள், 25.06.2019 இல் இறையடி சேர்ந்த சமூகத் தொண்டரும் கூட்டுறவுத் துறையின் பற்றாளரும் தனது உறவினருமான கு.வி.கந்தசாமி அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70054).