நா.இரத்தினசபாபதி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 1975. (யாழ்ப்பாணம்: மெய்கண்டான் அச்சகம், ஸ்ரான்லி வீதி).
(8), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×12.5 சமீ.
1950 முதல் ஆண்டுதோறும் நல்லூர்த் திருவிழாவில் மெய்கண்டான் அச்சகத்தினர் முருகன் புகழ்பாடும் பிரபந்தங்களை அச்சிட்டு அன்பளிப்பாக வெளியிடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். 1975இலும் இப்பணியின் வரிசையில் இலகுவான எளிய நடையுடன் கூடிய ‘கந்தர் அநுபூதி” என்னும் பக்தி இலக்கிய நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் 1975 வைகாசி விசாகத் தினத்தில் சுழிபுரம் பறாளாய்த் தேர்த் திருவிழாவின்போது மெய்கண்டான் அதிபர் அமரர் நா.இரத்தினசபாபதி அவர்களால் தொகுக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.