சிவசத்தர். (இயற்பெயர்: சி.க.சற்குணசிங்கம்). அளவெட்டி: திரு. ப. இலங்கநாயகம், திருவடி நிழல் தொண்டர் சபை, 4வது பதிப்பு, 2005. (மானிப்பாய்: ஸ்ரீ சாயி அச்சகம், தாவடி).
112 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ.
தற்கால சிவபக்தர் ஒருவரின் உள்ளக் கிளர்ச்சியை உணரச்செய்யும் நல்லதொரு நூல். அளவெட்டி திருவடி நிழல் மடாலயத்தை நிறுவிய சிவதத்தர் எழுதிய இந்நூலில், சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தின் பிழிவாகிய ஒரு கட்டுரையும், ஆசிரியர் இயற்றிய திருவடி நீழற் பதிகம், வெற்றிவேலாயுதம், திருக்கோணேஸ்வரப் பதிகம், திருக்கோயிற் பதிகம், முன்னேசுரப் பதிகம், கோயில், திருக்கேதீச்சரம், நமசிவாயப் பதிகம், ஆனைக்குட்டிச் சுவாமிகள் பற்றிய பாடல்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் முதலில் 1933இல் ‘திருக்கைலாச பரம்பரைச் சந்தானாசிரியர் புராணம்” என 1933ஆம்ஆண்டில் முதல் பதிப்பாகவும், ‘கைலைப் புராணம்” என 1950ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்திருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 172738).