16141 சிவபெருமானலங்காரம் (மூலம்).

ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.சோமசுந்தர ஐயர், புலோலி பசுபதீசுர சுவாமி கோவில், புலோலி, 3வது பதிப்பு, பங்குனி 1940, 1வது பதிப்பு 1879, 2வது பதிப்பு, ஆங்கீரச வருடம் 1932, (யாழ்ப்பாணம்: இலங்கைநேச முத்திராஷரசாலை).

(13) பக்கம், விலை: 10 சதம், அளவு: 19.5×11.5 சமீ.

யாழ்ப்பாணம் புலோலி ஆரிய திராவிட மஹாபண்டிதர் பிரமஸ்ரீ ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள் மகாதேவ ஐயர் (1853 – 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும் காவிய வியாகரணங்களையும் கற்றதுடன் உயர்தரத் தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். இவர் சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்ற நூல்களை இயற்றினார். புலோலி பசுபதீசுரசுவாமி கோவிலின் அர்ச்சகராக இருந்தவர். 53 ஆண்டுகளுக்கு முன்னர் புலோலி பசுபதீசுரசுவாமி கோவிலில் பாடியரங்கேற்றிய இந்நூல் இலங்கைநேசன் முத்திராட்சரசாலையிற் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்நூலின் பிரதிகள் கைவசமற்றநிலையில் இரண்டாம் பதிப்பு 1932இல் வெளிவந்தது. இப்பிரதி முன்னைய இரண்டாம் பதிப்பின் மீள்பதிப்பாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 5363).

ஏனைய பதிவுகள்

9208 சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மானிப்பாய்: மு.கந்தையா, சுதுமலை, 1வது பதிப்பு, ஜுலை 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). xxiv, 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. பண்டிதர் மு.கந்தையா

12432 – யாழ்நாதம்: இதழ் 9-2003.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 72 பக்கம்,