சுதந்தரி சஷாந்தன். யாழ்ப்பாணம்: T.சஷாந்தன், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).
(2), iv, 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
நூலாசிரியர் வித்துவான் க.சொக்கலிங்கத்தின் (சொக்கன்) மகனின் வழிவந்த பேர்த்தியாவார். இவ்வாண்டு (2022) நல்லூர் திருவிழாவில் சுதந்தரி ஆறுபடைவீடுகளையும் அவற்றின் தெய்வீக ஊற்றுக்களையும் பக்திப் பரவசத்துடன் ஓசை ஒழுங்கு சிதையாமல் செய்யுள்களாகச் செதுக்கியுள்ளார். 11.08.2022 நல்லூர் கோவிலின் மஞ்சத் திருவிழாவன்று வெளியிடப்பட்ட சிறு நூல்.