16153 பன்னிரு திருமுறைத் திரட்டு.

நா.முத்தையா (தொகுப்பாசிரியர்). நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1978. (நாவலப்பிட்டி:  ஆத்மஜோதி அச்சகம்).

(4), 96 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18.5×12 சமீ.

அருளாளர்கள் இறைவனைத் தாம் அனுபவித்த வண்ணம் எம்மையும் அநுபவிக்கச் செய்வதற்காக தோன்றியவையே திருமுறைகள். அருளோடு கூடிய சிவபரம் பொருளுக்குத் ‘திரு” என்று பெயர். பெறத்தக்க அருட்செல்வத்தை நாடி அடைந்ததன் பயனாய் இறை அடியார்கள் பெற்ற இன்பம் அவர்கள் உள்ளத்தினின்றும் தோத்திரப் பாடல்களாய் வெளிவந்தன. தாம் பெற்ற இன்பத்தினை யாவரும் பெற அருளினார்கள். ‘முறை” என்ற சொல் நூல் என்ற பொருளில் வந்தது. சிவபரம்பொருளைப் பற்றிக் கூறும் நூல் ‘திருமுறை” ஆயிற்று. திருமுறைகள் பன்னிரண்டு ஆகும். பன்னிரு திருமுறைகளிலும் திருஞானசம்பந்தர் முதல் சேக்கிழார் பெருமான் ஈறாக 27 அருளாளர்கள் பாடி உள்ளார்கள். அந்த 27 அருளாசிரியர்களினது தெய்வீக வாழ்க்கையைச் சந்திப்பதே இத்திருமுறைகளின் பெரும்பயனாகும்.

ஏனைய பதிவுகள்