J.S.K.A.A.H. மௌலானா. (இயற்பெயர்: ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா). திருச்சி 620 009: அவ்னிய்யா பதிப்பகம், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குளத்துப் பட்டி அஞ்சல், ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல் 624 001).
101 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14.5 சமீ.
‘முதலாம் ஜீஸ்உக்கு விரிவுரை எழுதியுள்ளோம். திருக்குர் ஆனுக்கு பல்லாயிரக் கணக்கான விரிவுரைகள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இன்னும் சிலர் பல புது முறைகளையும் கையாளத் தொடுத்துள்ளார்கள். கருத்து மறைந்துள்ள சில குர்ஆன் வாக்கியங்களுக்கு அப்படி அப்படியே பொருள் கூறப்பட்டுள்ளமையால் உண்மை விளக்கம் மறைந்து போகிறது. பொருத்தமற்ற கருத்து வெளியாகின்றது. இதனால் இஸ்லாத்தில் குளறுபடி உண்டாகிறது. இவையெல்லாம் நீக்கப்படடே விரிவுரை எழுதப்படுதல் வேண்டும். பல தப்ஸீர்கள் இதில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆங்கிலம், தமிழ், அறபு ஆகிய தப்ஸீர்களிலிருந்து முக்கியமான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இடைக்கிடை விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் முடிவில் தப்ஸீர் செய்குல் அக்பரிலிருந்து மிக முக்கியமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துச் சொற்களுக்கும் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குர் ஆன் வாக்கியங்களுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன” (J.S.K.A.A.H. மௌலானா, முன்னுரையில்).