எம்.எஸ்.எம்.ஸியாப் (நளீமி). வெலிகாமம்: உரையாடல் தொடர்கிறது, 11, கொஹீணுகமுவ வீதி, புதிய தெரு, 1வது பதிப்பு, மே 2017. (மஹரகம: மில்லெனியம் பிரின்டர்ஸ்).
62 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43973-1-6.
இந்நூலில் நோன்பும் குறிக்கப்பட்ட நேரங்களும், நோன்பில் பொதுவான சில கேள்விகள், நோன்பும் பெண்களும், நோன்பும் தாம்பத்திய வாழ்வும், நோன்பும் மருத்துவ சிகிச்சைகளும், நோன்பை விடுதலும் கழாவும், ரமழானும் விஷேட இபாதத்துக்களும், ஸீன்னத்தான நோன்புகள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் நோன்பு பற்றிய தெளிவும் வழிகாட்டலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோன்போடு தொடர்புபட்டதாக அன்றாடம் எழும் பல்வேறு மயக்கங்கள், சந்தேகங்களுக்கான போதிய வழிகாட்டல்கள் நவீனகால அறிஞர்கள் பலரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பத்வாக்கள் தெளிவுபடுத்துகின்றன. மிகவும் இலகுவான மொழிநடையில் சமகால அறிஞர்கள் மேற்கொண்ட நோன்போடு தொடர்பான சட்ட ரீதியான விளக்கங்களை தமிழ்மொழியில் கொணர்ந்த ஷெய்க் ஸியாப் (நளீமி) மிகவூம் பாராட்டத்தக்கவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27071).