J.S.K.A.A.H. மௌலானா. (இயற்பெயர்: ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா). திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு, 1வது பதிப்பு, 2015. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல் 624 001).
44 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18×12 சமீ.
காத்தம் நபிகளார்-கதீஜா பிராட்டியாரின் மகளார் பாத்திமா நாயகி அவர்களாவார். அலிப்புலியாரின் அருமை மனைவியும், இமாம் ஹஸன் ஹ{ஸைனாரின் அன்பு அன்னையுமாவார். பாத்திமா நாயகியின் பேரில் பாடப்பெற்ற அவரது திருச்சரிதம் கூறும் அழகிய தமிழ் மாலையே இதுவாகும். ரஸூல் மாலை, முஹிய்யுத்தீன் மாலை போன்று அன்றாடம் வீடுகளில் ஓதவும், மௌலிது மஜ்லிஸ்களில் பாடிப் பயன்பெறவும் வாய்ப்பாக இம்மாலை அமைகின்றது.