16246 கோவிட் – 19 : பேரிடர் காலத்தில் இளையோரின் கல்வி-சவால்களும் சாத்தியங்களும்.

இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம் : ஆறுதல் நிறுவனம், 51, வைமன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, புரட்டாதி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98325-0-3.

சமூக இடைவெளி மற்றும் எண்ணிம இடைவெளி ஆகிய இரண்டும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு உருவாக்கியுள்ளன என்ற கருப்பொருளை சமூகவியல் நோக்கில் இந்நூல் ஆராய்கின்றது. சமூக இடைவெளி சக எண்ணிம இடைவெளி சமன் கல்வியில் ஏற்றத்தாழ்வு, கோவிட் -19 பேரிடரும் பிள்ளைகளின் சமூகமயமாக்கலிலான தேக்கநிலையும்: மாற்றுகளைத் தேடுதல் குறித்த கருத்தாடலுக்கான அவசியம், கோவிட் -19 பேரிடர் காலத்து இளைஞர்கள்: கரிசனை கொள்ளவேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும், நிலைமாறும் கல்வி ஒழுங்கில் பரீட்சை மையக் கல்வி: அசாத்தியங்களைக் களைவித்தலும் சாத்தியங்களை விளைவித்தலும், செயலிகள், சாதனங்களை மையப்படுத்திய பேரிடர்கால உயர்கல்வி: கல்வியில் சுயசிந்தனையை காவுகொள்ளும் புதிய ஆதிக்கவாத பொறிமுறை ஆகிய ஐந்து இயல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் சமூகவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Free online Ports

Articles The Invaders from the Planet Moolah slot machine – How to pick An educated On-line casino Added bonus Type of Slot Games Get A