16302 இரண்டாம் மொழி தமிழ் : தரம் 9.

எழுத்தாளர் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2009. (ஹோமகம: கருணாரத்தின அன்ட் சன்ஸ், இல. 67, A+.B.V (U.D.A.) கைத்தொழிற் பேட்டை, கட்டுவான வீதி).

xii, (4), 135 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 25×19.5சமீ.

கல்வித் திணைக்களப் பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாடத்தினூடாகவும் அறிவு மேம்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்தினதும் பாடத்திட்டம் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சீர்திருத்தப்படுவது மாணவர்களளுக்கு அப்புதிய அறிவை வழங்குவதற்காகவே. திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடநூல்களை ஆக்கும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தைச் சாரும். அவ்வகையில் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப புதிதாக ஆக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஒன்பதாம் தரத்திற்குரிய பாடநூல் இதுவாகும். இதில்  தேனியாரே சொல்லுங்கள், விந்தையான ஒன்று, எல்லோரும் கொண்டாடுவோம், ஏமாற்றம், புத்தகம் பேசுகிறது, தொலைக்காட்சி, திருவள்ளுவர், பொழுதுபோக்கு, வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், தங்கத்தேர், மூன்று கேள்விகள், இனிமைத் தமிழ் மொழி, வானிலொரு பவனி, மூட ஆமை, செல்வி எழுதிய கடிதம், உண்மையின் உயர்வு ஆகிய பதினாறு பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்