எட்வின் சவுந்தரா, செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: செ.அன்புராசா, அ.ம.தி., 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: யுனைட்டெட் பிரின்டெக்).
iv, 50 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISBN: 955-1390-00-8.
2004, மார்கழித் திங்கள் 26ஆம் நாள் மறக்க மடியாத நாள். தென்னாசிய நாடுகளை சுநாமி தாக்கிய நாள். இதனால் 2,00,000 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போனார்கள். பல்லாயிரம் கோடி சொத்துக்கள் அழிந்து போயின. இப்பேரழிவுக்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. மிகக் கூடுதலான அழிவைச் சந்தித்த இந்தோனேசியாவுக்கு அடுத்த இடத்தை இலங்கை வகிக்கின்றது. இந்நூல் சுநாமி அழிவுகளையும் அதன் பின்னர் மக்கள் மீண்டெழுந்தமையையும் வண்ணப் புகைப்படங்களாக சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். கலாநிதி எட்வின் சவுந்தரா அமெரிக்காவில் வாழ்கின்றார். அவருடன் இணைந்து அருள்திரு செபமாலை அன்புராசா அவர்கள் இப்பணியை செவ்வனே ஆய்றியுள்ளார்.