16349 பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்: ஆய்வரங்கு கட்டுரைகளின் தொகுப்பு நூல்-2019.

தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xii, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

2019ஆம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழாவும் அதனோடிணைந்த ஆய்வரங்கமும் வவுனியா மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் முதல்நாள் காலை அமர்வாக இடம்பெற்ற ‘பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்” என்ற பிரதான ஆய்வுப் பொருளில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு மேம்பாட்டுக்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்- ஆக்கச் செயன்முறையும் சவால்களும் (வேல் ஆனந்தன்), கிராமிய வாழ்வில் நிலைபேற்றுக்கான நாட்டார் கலைகள்: மரபும் மாற்றமும்- மன்னார் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (மன்னார் அமுதன்), வவுனியா பிரதேச மாவட்ட கலாசாரப் பேரவைகளும் கலை இலக்கிய வளர்ச்சியும் (அகளங்கன்), கைவினைக் கலைகள்: வாழ்வியல் அடையாளமும் வணிக அழகியல் நோக்கும் (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), அடையாள உருவாக்கத்தில் கலை: அடங்காப்பற்று வன்னி-தொல்லியல் வழியான வெளிப்பாடுகள் (அருணா செல்லத்துரை), நவீன நாடகங்களில் மரபின் நீட்சியும் எதிர்கொள்ளப்படும் சவால்களும் (க.ரதிதரன்), தமிழர் வாழ்வில் தொல்கலை வடிவங்களின் மீட்டுருவாக்கத்தில் ‘பறை வாத்திய” மைய ஆய்வு (றஜீபன் தர்மினி), சமயச் சடங்குகளோடு இசைந்த கலைகள்: முல்லை மாவட்ட அம்மன் ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (சிவ.முகுந்தன்), கலைகளின் வளர்ச்சிக்கான தேவையும் மட்டுப்பாடுகளும் (கனகரத்தினம் மனோரஞ்சன்) ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்