16359 ஏழிசை கீதமே: தமிழ்த் திரையிசைப் பாடல்கள் குறித்த பதிவுகள்.

சி.விமலன். யாழ்ப்பாணம்: சின்னராஜா விமலன், உயில் வெளியீடு, திரவிய பவனம், மனோகரா, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

128 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-44157-2-0.

இது தமிழ்த்திரை இசைப்பாடல்கள் குறித்த பதிவுகளைக் கொண்ட கட்டுரை நூல். நூலாசிரியர் விமலன் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிளை நதியின் பிரவாகம் (2013), விசையுறு பந்தினைப் போல் (2014) ஆகியவற்றைத் தொடர்ந்து இவரது மூன்றாவது படைப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஈழத்துக் கலை இலக்கிய வெளியீடுகளில் இசை பற்றிய நுண்பார்வையுடன் நூல்கள் வெளிவருவது அரிது. அதிலும் சினிமாப் பாடல்களை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இரசித்தாலும், அவை தீண்டத் தகாதவை, அவை இசை வகையே அல்ல என்று முழங்கும் சில படைப்பாளிகள் மத்தியில் சினிமாப் பாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஈழத்தில் தமிழ்த் திரை இசைப்பாடல்கள் குறித்த ஆய்வுகளுக்கான ஒரு முன்வரைவு எனலாம்.

ஏனைய பதிவுகள்

12648 – மனிதவள முகாமை:உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கான தந்திரோபாயங்களும் நுட்பங்களும்;.

க.ரகுராகவன், இரா.பத்மரஞ்சன். மட்டக்களப்பு: யுனைட்டட் வெளியீடு, மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் சமூக அபிவிருத்தி நிதிக்கான வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

14602 சாமரையில் மொழிகலந்து: கவிதைத் தொகுதி.

அன்புடீன் (இயற்பெயர்: பீ.எம். கலந்தர் லெவ்வை). அக்கரைப்பற்று: பாலம் கலை இலக்கிய பேரவை, ஏ.ஜே. கொம்ப்ளெக்ஸ், பிரதான பாதை, 1வது பதிப்பு, ஜனவரி, 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட் ). xvi, 116