16495 என் எல்லா நரம்புகளிலும்.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா 3 : ஜே.பிரோஸ்கான், பேனா பப்ளிக்கேஷனஸ், 92/4, உமர் ரழி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0932-04-7.

ஆசிரியரின் நான்காவது கவிதைத் தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் மொத்தம் 39 கவிதைகள் உள்ளன. உலகு எதிர்நோக்கும் சவால்களை உடைத்தெறியத் தலைப்படும் ஒரு கவிஞனின் பாடல்கள் இவை. இயற்கையின் ஆதங்கம், எதிர்பார்ப்பு, போன்றவற்றை கடல்நீர், காற்று, மரங்கள், நதிகள், கோடை வெய்யில், என்பன எம்முன் வந்து புலம்புவதைப் போல இவரின் உலகத்தை அளக்கும் நிமிஷங்கள் (கடலின் ஆதங்கம்), காகங்களின் மாநாடு போன்ற கவிதைகள் இயற்கையாய் அமைந்திருக்கின்றன. சமூகத்தில் ஏற்பட்டுவிட்ட துயரங்களையும் இயற்கையின் நெருக்குதல்களையும் வித்தியாசமான கோணத்தில் நின்று வெளிப்படுத்தும் கவிதைகளாக இவை அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

14722 வானம்பாடி: போர்க்கால வாழ்வியல் பதிவுகள்-பகுதி 02.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜுன் 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).