16555 பறவைகளுக்குத் திசைகள் தெரியாது.

சித்தாந்தன். யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை 600018: பாரதி பதிப்பகம், இல.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை).

96 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9078-916-5.

“சித்தாந்தன் கவிதைகளில், யதார்த்தமான சூழலும், அதேசமயம் இயல்புநிலைப்படுத்தப்பட்ட விநோதமும் (Normalized Fantasy) சேர்ந்திணையும் மாயாயதார்த்தவாதப் (Magical Realism) பண்பு மிக மேலோங்கிய நிலையில் வெளிப்படுகிறது. புனைவுக்குள் புனைவெனும் பெரும்புனைவு (Metafiction) அவற்றில் நடமாடுகிறது. அவற்றின் பகுதியாகப் புராணிகங்களும் (Myths), புராணிகத்தன்மை ஏற்றப்பட்ட விடயங்களும் பிரதான கூறுகளாகின்றன. அன்றாடத் தன்மையும் (Mundane) சாதாரணத்துவத்தின் தீவிரமான தொனியும் (Serious tone of ordinary) கொண்டுள்ள அவரது கவிதைகள் உத்தியோகபூர்வ நிலைப்படுத்தப்பட்ட அனைத்து மேலாதிக்கங்கள் மீதான அரசியல் விமர்சனங்களுமாகின்றன.” (பா.அகிலன், பின்அட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்