16557 பாஷோவின் அறையில்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: விக்னேஷ் பிரிண்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-87499-54-6.

தன் சமூகம் சார்ந்த அக்கறையோடும் போர்வெறிக்கு எதிரான குரலோடும் கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர் கவிஞர் தமிழ் உதயா. பரந்து விரிந்த பூமி, நில்லாது ஓடும் நதி, பறவையின் வானம், தகிக்கும் நெருப்பு, உணர்வைத் தொடும் காற்று என்று ஐம்பூதங்களையும் மட்டுமல்லாது நேற்றைய இன்றைய பொழுதின் வலிமிகுந்த சமூகத்தை, முகவரி தொலைத்த மனிதர்களை என்று அனைத்தையும் தன் கவிதைகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்கின்றார். உலகக் குறுங்கவிதைகளின் பிதாமகராக இவர் கருதும் “பாஷோ” வையே இக்குறுங்கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் வரித்துக்கொண்டுள்ளார். இக்கவிதை நூல் தமிழ் உதயாவின் பதினொராவது கவிதைத் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்

10915 தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,