சூரிய நிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). யாழ்ப்பாணம்: பிஷப் சௌந்தரம் மீடியா சென்டர், 1வது பதிப்பு, மார்கழி 2018. (மிருசுவில்: மாதுளன் பதிப்பகம், உசன் சந்தி).
xv, (14), 195 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ.
ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பெற்ற கவிஞர் சூரியநிலாவின் இக்கவிதைத் தொகுதி மனுமகன் மலர்வு, ஆயத்தம், போதனை, எருசலேமிற்குள், பாடுகள், விண்ணேற்றம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் (சுவடுகள்) வகுத்துத் தரப்பட்டுள்ளது. இக்கவிதைகளின் முற்பகுதி 2001ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை “மீட்பின் சுவடுகள்” என்னும் பெயரில் “பாதுகாவலன்” பத்திரிகையில் கவிதை நடையில் எழுதிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டது. பல்வேறு காரணங்களால் அக்கவிதைத் தொடர் முற்றுப்பெறாத நிலையில் அவற்றை தொடர்ந்து எழுதி முழுமைப்படுத்தி தனிநூலாகத் தற்போது வெளியிட்டிருக்கிறார்.