ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு: அல்ஹாஜ் T.M. முனாப் அஸீஸ், பிரின்ட் சிட்டி).
iv, 190 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 1500., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-624-97389-3-5.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பன்னிரு காவியங்களையும் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் உள்ளிட்ட பதினையாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்களை படைத்த பெருமை மிக்கவர். இயல்பாகவே இவர் ஓவியங்களின் மேல் கொண்ட விருப்பின் காரணமாக இந்நூல் உருவாகியுள்ளது. இதில் இந்திய ஓவியர் ரவிவர்மா உள்ளிட்ட தன் கருத்தைக் கவர்ந்த ஓவியர்களின் ஓவியங்களை இணையத்தில் தேடி அவதானித்து அதன் வழி தனக்குத் தோன்றிய அழகான கருத்துக்களை செய்யுள் வடிவில் இங்கே படையலிட்டுள்ளார். இவை முன்னர் இவரால் தனது முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்ட வேளையில் வாசகர்களின் சிந்தையை ஆட்கொண்டிருந்தன. இந்நூலுக்கான சாற்று கவிதையை தமிழ்மாமணி அல் அசூமத் வழங்கியுள்ளார். பின்னட்டையில் காப்பியக்கோ பற்றி கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.