16594 குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து.

குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), பாக்கியநாதன் அகிலன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தகக்கூடம், 204 C, பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு நவம்பர் 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

xxii, (8), 245 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-6072-00-1

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதி நெறிப்படுத்திய மண் சுமந்த மேனியர்-1 (1985), மண் சுமந்த மேனியர்-2 (1985), அன்னை இட்ட தீ (1991), வேள்வித்தீ (1994), மனத்தவம் (2002) ஆகிய ஐந்து நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம் ஈழத்தின் அரங்கியல் உலகில் முக்கியமான ஒருவராவார். 15.11.1931 இல் பிறந்த இவர், யாழ்ப்பாணம்-திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராக, அதிபராக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை வருகை விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். பா.அகிலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் கலை வரலாற்று விரிவரையாளராவார்.

ஏனைய பதிவுகள்