மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: செ.அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைஸஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).
xx, 144 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-42626-7-6.
சுமை, சத்தியம், வந்தாளே மகராசி, பரிசு, தூண்டில், உயர்ந்தவர்கள் ஆகிய ஆறு வானொலி நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டுக்கான தேசிய சாஹித்திய விருதினை வென்ற வானொலி நாடக நூல். இந்நூலாசிரியர் தானே தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். கலைகள் தவழுமிடத்தில் அமைந்துள்ள யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கிப் படித்ததனாலேயே இத்துறையில் ஈர்க்கப்பட்டு, பாடசாலைச் சமூகமும் உந்து சக்தியாக அமைய, கலை ஆர்வமுள்ள பொறியியலாளராக எனது வாழ்க்கைப் பயணம் தலைநகராம் கொழும்புக்கு நகர்ந்தது. இந்தக் கலையார்வமானது பொறியியல்துறையில் மன அழுத்தங்கள் ஏற்படும் பொழுது அவை கிறுக்கல்களாகவும், இரைச்சல்களாகவும் வெளிப்பட்டன. இவை இலங்கை வானொலி என்ற குடையின் கீழ் கலைத்துறை ஜாம்பவான்களினால் புடம் போடப்பட்டு கலை உலகிற்கு என்னை அடையாளப்படுத்தின. அதன் மூலம் கிடைத்த விருதுகள் என்னை மேலும் மெருகூட்ட இன்று நான் வானொலி நாடகக் கலைஞராக தொண்ணூறு வரையான நாடகங்களுக்குக் குரல் கொடுத்து நாடகப் பிரதி எழுத்தாளராக ஐம்பது வரையான நாடகப் பிரதிகளையும், நூலாசிரியராக 2018ஆம் ஆண்டின் சிறந்த சுயநாடக நூலுக்கான அரச விருது பெற்ற “மனவைரம்” உட்பட ஏழு நூல்களையும் வெளியிட்டு தொலைக்காட்சித் துறையையும் ஊறுகாய் போல் தொட்டு ஒரு “இலங்கை கலாசாரத் திணைக்களத்தால் அங்கீகரித்து அடையாளப்படுத்தப்பட்ட நாடகக் கலைஞனாக சமூகத்திற்கு அடையாளப்படுத்தி இன்று எட்டாவதான ஆக்கத்தின் மூலம் உங்களைச் சந்திக்கிறேன்”(ஆசிரியர் உரையில்).