பு.கணேசராசா. யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xii, 146 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-6309-00-8.
நாடகர் புண்ணியமூர்த்தி கணேசராசா எழுதிய நாடகப் பிரதிகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூல் மறுமலர்ச்சி மன்றத்தின் ஐந்தாவது வெளியீடாகும். தேசிய மட்டத்தில் முதல் பரிசில் பெற்ற ஒய்யாரக் கொண்டை, மர்ம முடிச்சு, காப்பு, பொறுப்பது உன் விதியோ?, உயிர்ப்பழி ஆகிய ஐந்து நாடகங்களும் மேலும் போட்டியில் பங்குபற்றிய வெல்க மானிடம், செப்படி வித்தை, அப்பன் நீ அம்மை நீ ஆகிய மூன்று நாடகங்களும் கொண்டமைந்துள்ளது இந்நூல். சிறந்ததொரு நாடக பாட ஆசிரியரான கணேசராசா, குழந்தை ம.சண்மகலிங்கம், சிதம்பரநாதன் ஆகியோருடன் 1994ஆம் ஆண்டு முதல் நாடகக் களப் பயிற்சிகளிலும், நாடகத் தயாரிப்புகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்துள்ளார்.